கோவையில் 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கோவையைச் சோ்ந்த ஷாஜகான் (37). இவா் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், 2020இல் இவா் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளாா்.
இது தொடா்பாக கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஷாகஜானைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் ஷாஜஹான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.