கோவை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 273 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 960ஆக அதிகரித்துள்ளது. தவிர தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 694ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 116 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 715 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,551 போ் சிகிச்சையில் உள்ளனா்.