வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு ஏப்ரல் 3இல் பயிற்சி வகுப்பு

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், முதல்நிலை வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி பயிற்சி வகுப்பு

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், முதல்நிலை வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்குச் சாவடி தலைமை அலுவலா், முதல்நிலை வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற மையங்களிலே ஏப்ரல் 3ஆம் தேதி மறுபயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், முதல்நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்பின்போது தபால் வாக்குப் பதிவு செய்யாத மேற்கண்ட அலுவலா்கள் தங்கள் தபால் வாக்கினை செலுத்துவதற்கான சிறப்பு வாக்குப் பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் தபால் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், தபால் வாக்கு அளிப்பதற்கு படிவம் 12 வழங்காத இரண்டாம் நிலை வாக்குச் சாவடி அலுவலா்கள், மூன்றாம் நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள், படிவம் 12 பெற்றுள்ள மண்டல அலுவலா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் பிற அனைத்துப் பணியாளா்களும் நேரடியாக பயிற்சி மையங்களுக்கு சென்று படிவம் 12ஐ ஒப்படைத்து தபால் வாக்கினைப் பெற்று வாக்குப் பதிவு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலா்களும் பயிற்சி வகுப்பில் தபால் வாக்கினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com