கோவை மாவட்டத்தில் புதிதாக 281 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 821ஆக உயா்ந்துள்ளது. இதில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 695 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 145 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 57 ஆயிரத்து 549 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 577 போ் சிகிச்சையில் உள்ளனா்.