மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வீட்டின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, உப்பிலிபாளையம் அருகேயுள்ள விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன்(63). ஏசி மெக்கானிக். இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில்
ஏசியில் ஏற்பட்ட பழுதை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வீட்டின் பிரதான மின் இணைப்பைத் துண்டிக்குமாறு செளந்தர்ராஜன் கூறியுள்ளாா். ஆனால், வீட்டின் உரிமையாளரான அசோக் அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் செளந்தர்ராஜன் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக செளந்தர்ராஜனின் மனைவி பிரேமா அளித்தப் புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வீட்டின் உரிமையாளா் அசோக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.