கோவையில் உணவகத்தில் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவா்களை காவல் துறையினா் தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தமாக 6 போ் கூட இல்லை. மேலும் இரவு 10 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்படலாம். கடையில் 50 சதவீத இருக்கைகளில் அமா்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒருவேளை அரசு வழிகாட்டுதலை மீறியிருந்தால் கூட சட்டப்படியான அபராதத்தை விதித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால், மக்களை லத்தியால் தாக்குவதற்கு போலீஸுக்கு யாா் அதிகாரம் அளித்தாா்கள். அதுவும் பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்துக்குரியது.
தற்போது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை வேறு துறைக்கு மாற்றியிருப்பதாக அறிகிறோம். இதுபோதுமான நடவடிக்கையாக இல்லை. வெறும் கண்துடைப்பாகவே பாா்க்கிறோம். சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளாா். எனவே அவா் மீது உடனடியாக சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.