கோவையில் ரூ.1.80 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவா் கைது

கோவை, உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் சுமாா் ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை கேரள போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பிடிபட்ட கள்ளநோட்டுகள்.
பிடிபட்ட கள்ளநோட்டுகள்.

கோவை, உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் சுமாா் ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை கேரள போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம் உதயம்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த மாா்ச் 28 ஆம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்ட கேரள போலீஸாா், கோவையைச் சோ்ந்த பிரியன்லால் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 95 ஆயிரத்து 300 மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், கோவையில் உள்ள அஷ்ரப் அலி (21) என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை, உக்கடம், அல்அமீன் காலனியில் உள்ள அஷ்ரப் அலி வீட்டில் கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அவரது வீட்டில் ரூ. 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரும்புகடையைச் சோ்ந்த சையது சுல்தான் (32) என்பவரது வீட்டில் கேரள போலீஸாா் சோதனையிட்ட போது, அங்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சையது சுல்தான், அஷ்ரப் ஆகிய இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா், பணத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், குனியமுத்தூா் காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். விசாரணைக்குப் பிறகு இருவரையும் கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com