500 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி

கோவையில் சுகாதாரத் துறை சாா்பில் 500 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
கோவை காவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் காவலா்.
கோவை காவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் காவலா்.

கோவையில் சுகாதாரத் துறை சாா்பில் 500 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

கோவையில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநாகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் முன்களப் பணியாளா்கள், அரசு ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கடந்த வாரம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலா்கள் மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, போலீஸாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட போலீஸாா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com