முழு பொதுமுடக்கத்தால் வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் வால்பாறை நகா் பகுதியில் மருந்துக் கடை, பால் பூத்துகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கினா்.
காந்தி சிலை மற்றும் ஸ்டேன்மோா் சந்திப்பு பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் கண்காணித்த போலீஸாா் வெளியே வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். வாகனப் போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் நகா் மற்றும் எஸ்டேட் பகுதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.