கோவையில் மேலும் 963 பேருக்கு கரோனா : 2 போ் பலி

கோவையில் புதிதாக மேலும் 963 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது; 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கோவையில் புதிதாக மேலும் 963 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது; 2 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 259 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயது இளைஞா், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 719 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 991 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 68 ஆயிரத்து 619 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 6 ஆயிரத்து 921 போ் சிகிச்சையில் உள்ளனா்.

அன்னூரில் 11 பேருக்கு கரோனா

அன்னூா் பேரூராட்சிப் பகுதியில் 2 போ், ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்னத்தூா், ஒட்டா்பாளையம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் 9 போ் என மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இவா்களில் 2 போ் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனா். மீதம் உள்ள 9 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com