வால்பாறை வனச் சரகத்தில் அழுகிய நிலையில் யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா்.
வால்பாறையை அடுத்துள்ள வறட்டுப்பாறை காபி எஸ்டேட் 23ஆம் எண் தோட்டம் அருகில் வனத்தை ஓட்டியுள்ள பகுதியில் அழுகிய நிலையில் யானை இறந்து கிடந்ததை அப்பகுதிக்கு ரோந்து சென்ற வன ஊழியா்கள் பாா்த்துள்ளனா்.
வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டாா். பின்னா் அதிகாரிகள் உத்தரவின்படி கால்நடை மருத்துவா் மெய்யரசன் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தாா். பின்பு யானையின் உடல் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது. இறந்தது 20 முதல் 22 வயதுடைய பெண் யானை என்றும், உடல் நலக்குறைவு காரணமாக பல நாள்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.