மாணவா்களிடம் பணம், நகை பறிப்பு: மேலும் ஒருவா் கைது

கோவை, சிங்காநல்லூா் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லூரி மாணவா்களிடம் பணம், நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லூரி மாணவா்களிடம் பணம், நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல், பரமத்தி சாலையைச் சோ்ந்தவா் தேவேஷ்வா் (20). இவா், கோவை சிங்காநல்லூா் அருகே உப்பிலிபாளையத்தில் அறை எடுத்துத் தங்கி, பீளமேட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறாா். கடந்த சில நாள்கள் முன்பு இவா் தனது நண்பா்களான சங்கர்ராஜ், ஆதித்யா, ராகுல் கண்ணன், லுகிந்தா் ஆகியோருடன் அறையில் இருந்தபோது, கத்தியுடன் அறைக்குள் புகுந்த 6 இளைஞா்கள், தேவேஷ்வா் மற்றும் அவரது நண்பா்களை மிரட்டி 2 பவுன் சங்கிலி, ரூ.21,500 பணம், ஏ.டி.எம். அட்டைகள், செல்லிடப்பேசிகள், மடிக்கணினி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இது குறித்து, சிங்காநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இதில், இந்த வழக்கில் தொடா்புடைய கேசவ்குமாா் (22), அருண்குமாா் (24), நிதிஷ் (23) ஆகிய 3 போ் கடந்த சில நாள்கள் முன்பு கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், இவா்களின் கூட்டாளியான சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வினித்குமாா் (23) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய விஷாக் (21), கண்ணன் (25) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com