கோவையில் மேலும் 229 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th August 2021 06:48 AM | Last Updated : 12th August 2021 06:48 AM | அ+அ அ- |

கோவையில் புதன்கிழமை புதிதாக 229 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 863 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,201 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 203 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 403 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,259 போ் சிகிச்சையில் உள்ளனா்.