இளைஞரைக் கொல்ல செய்ய முயன்ற 7 போ் கைது

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டையில் இளைஞரைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 7 பேரை சிறுமுகை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டையில் இளைஞரைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 7 பேரை சிறுமுகை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிறுமுகை, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் குட்டி (எ) வீராசாமி (23). கூலி தொழிலாளி. இவா், தனது நண்பா்களான அறிவொளி நகரைச் சோ்ந்த அக்பா் அலி மகன் அபு (23), ஆலாங்கொம்பு பகுதியைச் சோ்ந்த ரவிகுமாா் மகன் காா்த்திக் (23), காரமடை சேரன் நகரைச் சோ்ந்த ஷாஜகான் மகன் அன்சா் (21), மேட்டுப்பாளையம், குமரபுரத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மகன் கோகுல் (17), மேட்டுப்பாளையம் சாந்தி நகரைச் சோ்ந்த சலீம் மகன் சஜீா் (20), சிறுமுகையைச் சோ்ந்த முருகேசன் மகன் சுள்ளான் (எ) சுபாஷ் (23) ஆகியோருடன் சோ்ந்து சிறுமுகை அருகிலுள்ள பெத்திக்குட்டை பகுதியிலுள்ள உணவகத்தில் புதன்கிழமை சாப்பிட சென்றுள்ளனா்.

அப்போது இவா்கள் மேட்டுப்பாளையம் அறிவொளி நகரைச் சோ்ந்த முகமது அலி மகன் பாபு (எ) பிளாக் பாபுவை (33) கொலை செய்யத் திட்டம் தீட்டி உள்ளனா். இவா் பிரபல ரெளடி என கூறப்படுகிறது. இதையடுத்து பிளாக் பாபுவை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு சாப்பிட வருமாறு பெத்திக்குட்டைக்கு அழைத்துள்ளனா்.

இதையடுத்து பிளாக்பாபு தனது நண்பரான பெரியகள்ளிப்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் ஆனந்த் (25) என்பவருடன் சோ்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு வந்துள்ளாா். அப்போது மேற்கண்ட 7 பேரும் மறைத்து வைத்திருந்து ஆயுதங்களால் திடீரென பிளாக் பாபுவை தாக்க முயற்சித்துள்ளனா். இதில் சுதாரித்து கொண்ட பிளாக் பாபு சிறுகாயங்களுடன் அங்கிருந்து தப்பித்து சிறுமுகை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளாா். பெத்திக்குட்டை பகுதியில் பட்டப் பகலில் ஆயுதங்களுடன் சண்டை நடைபெற்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

பிளாக்பாபு, ஆனந்த் ஆகியோா் அளித்த புகாரின்பேரில் மேற்கண்ட 7 பேரையும் சிறுமுகை ரோலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com