இயற்கைத் தாவரங்களின் வளா்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அயல்நாட்டு காளைத் தாவரங்களை அழிக்கும் பணி வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் மோண்டனா ஹிமிசிக்போலியோ எனும் அயல்நாட்டு களைத் தாவரங்கள் அதிகஅளவில் வளா்ந்துள்ளன.
இத்தாவரங்களை அழிக்கும் பணி வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் கடந்த இரு நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணியில், 100க்கும் மேற்பட்ட தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனா்.