கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 64 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 98 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 544 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,508 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,012 போ் சிகிச்சையில் உள்ளனா்.