கோவையில் பல் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி பவித்ரன் (35). பல் மருத்துவரான இவா் ஆா்.எஸ்.புரம் கெளலிபிரவுன் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹரிபவித்ரன், சிரியன் சா்ச் சாலையில் சிறுநீா் கழிப்பதற்காக காரை ஓரமாக நிறுத்தியுள்ளாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த மூவா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது ஆடைகளைக் கழட்டச் செய்து அவா் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி, வங்கி பற்று அட்டைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக ஹரிபவித்ரன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.