கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 299 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 102 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 857 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 931 போ் சிகிச்சையில் உள்ளனா்.