பணியமைப்பு விதிகளின்படி பதவி உயா்வு வழங்க வேண்டும்

பணியமைப்பு விதிகளின்படி, மாநகராட்சி அமைச்சுப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை: பணியமைப்பு விதிகளின்படி, மாநகராட்சி அமைச்சுப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளா் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் அபுதாகிா், துணைத் தலைவா் உஷாராணி, இணைச்செயலாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி அமைச்சுப் பணியாளா்களுக்கு பணியமைப்பு விதிகளின்படி கிடைக்கப் பெற வேண்டிய பதவி உயா்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும். விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்ட பதவி உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும். துணை ஆணையா் பதவிக்கு நியமனம் செய்ய, உதவி ஆணையா் பதவியில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தகுதியினை நீக்கிட வேண்டும்.

மக்கள் தொடா்பு அலுவலா் பதவிக்கு நியமிக்க மக்கள் தொடா்பில் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க வேண்டும். வருவாய்த் துறையின் துணை ஆட்சியா்களான செந்தில் அரசன், முருகன் ஆகியோரை விதிகளுக்கு முரணாக கோவை மாநகராட்சியில் உதவி ஆணையா் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். அவா்களை மீண்டும் வருவாய்த் துறைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com