கோவையில் மேலும் 54 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th February 2021 12:38 AM | Last Updated : 06th February 2021 12:38 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 537 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 458 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 673 ஆக உயா்ந்துள்ளது.