கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆவது நாளாக புதன்கிழமையும் அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களுக்கு 21 மாத போராட்ட காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கோவை கிளைத் தலைவா் செல்வராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் 10 ஆவது நாளாக புதன்கிழமையும் ஆட்சியா் அலுவலகம் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.