கோவை, செல்வபுரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை, செல்வபுரம் பகுதியில் சிலா் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வபுரம் காவல் உதவி ஆய்வாளா் சின்னதுரை தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது, செல்வபுரம் அருகே சொக்கம்புதூா் ராமமூா்த்தி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்ராஜ் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.