மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் நியமனம்

காவல் துறை மேற்குமண்டல ஐஜியாக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காவல் துறை மேற்குமண்டல ஐஜியாக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவராக கு.பெரியய்யா, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் பணியாற்றி வந்தாா். . இந்நிலையில், தமிழகம் முழுவதும் 54 காவல் துறை உயா் அதிகாரிகள் புதன்கிழமை பணியிடம் மாற்றப்பட்டனா். அதில், மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பணியாற்றிய பெரியய்யா, சென்னை பொதுப்பிரிவு காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல்துறையில், தெற்கு பகுதி சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த தினகரன் கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளா் பிறப்பித்துள்ளாா். சென்னை வணிக குற்ற விசாரணைப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆா்.பாண்டியராஜன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.சசி மோகன், சென்னை காவல்துறை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஏ.மயில்வாகனன் கோயம்புத்தூா் நகர தலைமையக காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கோயம்புத்தூா் நகர தலைமையக காவல் துணை ஆணையராக பணியாற்றிவந்த கே.குணசேகரன் சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com