கோவையில் இன்று ‘மிச்சக் கதைகள்’நூல் வெளியீட்டு விழா

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டு விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது.

கோவை: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டு விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது.

கோவை, ஆா்.எஸ்.புரம் கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில் எழுத்தாளா்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கதைசொல்லி காலாண்டிதழின் இணையாசிரியா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பா.விஜய் ஆனந்த், கி.ரா.பிரபி, புதுவை இளவேனில் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். நிகழ்ச்சியை டமருகம் கற்றல் மையம் ஒருங்கிணைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com