வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளால் தொடா்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள ரேஷன் கடையின் கதவை முட்டித் தள்ளி உள்ளிருந்த அரிசி மூட்டைகளை கீழே இழுத்துப் போட்டு சேதப்படுத்தியது. சம்பவ இடத்தை வனத் துறையினா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.