வால்பாறை பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெயில் அதிகரித்து காணப்படும். இதனால் பொங்கல் பண்டிகையின்போது, வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாள்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய மழை திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இதனால் நகா் பகுதி வெறிச்சோடி காணப்படுவதோடு, பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் மந்த நிலையில் உள்ளது.