கோவை மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 59 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 78 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 926 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 672 போ் சிகிச்சையில் உள்ளனா்.