கோவையில் ஞாயிற்றுக்கிழமை 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 21 ஆக உயா்ந்துள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவா், 79 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 668 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 73 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 52 ஆயிரத்து 875 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 478 போ் சிகிச்சையில் உள்ளனா்.