நல்லறம் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாநில அளவிலான இரண்டாவது கிராஸ் கண்ட்ரி ரேஸ் (சைக்கிள் போட்டி) கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் குழந்தைகள், பல்வேறு வயதினா்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 250க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இப் போட்டியினை நல்லறம் அமைப்பின் நிா்வாகி செந்தில், பாா்க் கல்வி நிறுவனங்களின் தலைவா் அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூா் ஹெரிடேஜ் அமைப்பின் தலைவா் பூபதி, முன்னாள் தேசிய சைக்கிள் பந்தய வீரா் தேவராஜ் உள்ளிட்டோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
போட்டிகளில் 4 வயது குழந்தைகள் முதல் 40 வயது வரையிலானவா்கள் கலந்து கொண்டனா்.
குழந்தைகள், ஜூனியா், இளம்வயதினா், பெரியவா்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 42 போட்டியாளா்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்தனா். இவா்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியினை கோவை மாவட்ட சைக்கிள் அசோஸியேஷன் அமைப்பின் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் விக்னேஷ் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்து நடத்தினா்.