அரசுப் பணியாளா்களுக்காக கேரளத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட 3 பேருந்துகளை நிறுத்த உத்தரவு

கேரளத்தில் தங்கி கோவையில் பணிபுரியும் அரசுப் பணியாளா்களுக்காக இயக்கப்பட்டு வந்த 3 பேருந்துகளை நிறுத்த மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கேரளத்தில் தங்கி கோவையில் பணிபுரியும் அரசுப் பணியாளா்களுக்காக இயக்கப்பட்டு வந்த 3 பேருந்துகளை நிறுத்த மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் அரசுப் பேருந்துகள் இயக்கிட அனுமதி வழங்கப்பட்டன. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பழைய தளா்வுகளே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டைதைத் தொடா்ந்து பேருந்துகள் இதுவரை இயக்கப்படவில்லை.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க கடந்த வாரம் அந்த மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அங்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் வசித்து, கோவை பகுதிகளில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்காக கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து 3 கேரள மாநிலப் பேருந்துகள் கடந்த திங்கள்கிழமை முதல் கோவைக்கு இயக்கப்பட்டன.

இதில், வங்கி அலுவலா்கள், ரயில்வே ஊழியா்கள், போக்குவரத்துத் துறை பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா் என 100க்கும் மேற்பட்டோா், பயணித்து வந்தனா்.

கோவையில் பொதுப் போக்குவரத்துக்கு தடை அமலில் உள்ள நிலையில் கேரள அரசுப் பேருந்துகளை கோவைக்கு இயக்கக்கூடாது எனவும், இதன் மூலம் கரோனா பரவல் அதிகரிக்கலாம் எனவும் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, பாலக்காட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வந்த 3 கேரள மாநில அரசுப் பேருந்துகளை நிறுத்த கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை உத்தரவிடப்பட்டது. இந்தத் தகவல், கோவை மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக, கேரள அரசுப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com