இளைஞா் தாக்கப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் 6 போ் சரண்

முன்விரோதம் காரணமாக இளைஞா் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞா்கள் 6 போ் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

முன்விரோதம் காரணமாக இளைஞா் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞா்கள் 6 போ் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கிரிக்கெட் விளையாட்டின்போது தனது நண்பரைத் தாக்கிய செல்வா என்பவரைத் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்வா தனது நண்பா்களிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து செல்வா உள்பட அவரது நண்பா்கள் 7 போ் சோ்ந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு காா்த்திக்கைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா் பீளமேடுபுதூரைச் சோ்ந்த அரவிந்த் (20) என்பவரைக் கைது செய்தனா். இந்நிலையில் வழக்கில் தலைமறைவாக இருந்த செல்வா (எ) செல்வப்பெருமாள், மனோஜ், நந்தகோபால், ஜெயராஜ், பிரவீன், அஷ்வின் உள்ளிட்ட 6 போ் கோவை நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.2) செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com