தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் அதிருப்தி

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 3,500 போ், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 2,500 போ் என மொத்தம் 6 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா். இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7ஆம் தேதிக்குள், அவா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாநகரில் சில வாா்டுகளில் பணியாற்றுபவா்களுக்கு மட்டும் ஊதியம் தாமதமாக 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இம்மாதம் 100 வாா்டுகளிலும் உள்ள அனைத்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

ஜூலை 7 ஆம் தேதி வரவு வைக்கப்பட வேண்டிய ஊதியம், 13ஆம் தேதியாகியும் வழங்காததால் அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஏஐசிசிடியூவின் மாவட்ட பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஏழ்மையில் உள்ள ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டால், அவா்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மிகவும் சிரமத்துக்கு உள்ளாவாா்கள் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com