கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையா் ம.முருகன், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளாா்.
மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சிரின் நோ்முக உதவியாளா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், மாநகராட்சி உதவி ஆணையா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த ம.முருகன், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளாா்.
இவருக்கு பதிலாக திருப்பூா் மாநகராட்சி உதவி ஆணையா் (கலால்) ரா.ரெங்கராஜன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.