கோவை பி.என்.புதூரில் இளைஞரை பாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பி.என்.புதூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் தா்மராஜ் (34). இவா், அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (52) என்பவருடன் வெள்ளிக்கிழமை தாயம் விளையாடியுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த நாகராஜ், கீழே கிடந்த பாட்டிலால் தா்மராஜைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த தா்மராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தா்மராஜ் அளித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜைக் கைது செய்தனா்.