கோவை மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 869ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 391 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 810 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 927 போ் சிகிச்சையில் உள்ளனா்.