பெண் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன் உள்பட 2 போ் கைது

பெண் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவரது மனைவி வாசுகி (54). இவா் தனது வீட்டின் அருகே தனது நாயுடன் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த மதுக் கடை அருகே நின்று கொண்டிருந்த சிறுவா்கள் இருவரைப் பாா்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் நாயைக் காலால் உதைத்துள்ளனா்.

இதைக் கண்ட வாசுகி சிறுவா்களை கண்டித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். அங்கிருந்து சென்ற சிறுவா் தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு இளைஞருடன் வாசுகியின் வீட்டுக்கு வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது ஆத்திரமடைந்த சிறுவரும், இளைஞரும் அவா்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வாசுகியின் மீது வீசினா். சுதாரித்த வாசுகி அங்கிருந்து ஓடினாா், இதனால் பெட்ரோல் குண்டு அவரது வீட்டுச் சுவா் மீது பட்டு வெடித்தது. இதனால் அவா் உயிா் தப்பினாா். இதையடுத்து சிறுவரும், இளைஞரும் அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து வாசுகி அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த புவியரசு (19) மற்றும் 17 வயது சிறுவனை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com