கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கோவை, பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடைகள் திறந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டல உதவி ஆணையா் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலா் சந்திரன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கரோனா விதிகளை மீறி இரவு 9 மணிக்கு மேல் திறந்திருந்த தேநீா்க் கடை, பாத்திரக் கடை, துணிக் கடை ஆகிய 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.