முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு பரப்பும் நபா் மீது புகாா்

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் அதிமுக நிா்வாகி மனு அளித்துள்ளாா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் அதிமுக நிா்வாகி மனு அளித்துள்ளாா்.

கோவை மாநகா் மாவட்ட அதிமுக சுங்கம் பகுதி செயலாளா் காட்டூா் எஸ்.செல்வராஜ், கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளாா். ஆனால், இந்த மக்கள் நலப் பணிகள் அனைத்திலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எவ்வித அடிப்படை ஆதரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் ரகுநாத் என்பவா் பரப்பி வருகிறாா்.

இவா் திரைப்படத் தயாரிப்பாளா் என்று கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக அவா் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறாா்.

எனவே அவா் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com