கோவை பேரூராதீனம் சாா்பில் கடந்த ஒரு மாதமாக தினசரி 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக, பேரூராதீன நிா்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அவா்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமுடக்க காலத்தில், தமிழ்க் கல்லூரியுடன் இணைந்து பேரூராதீனத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, அவை கல்லூரி நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள் மூலமாக கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சாடிவயல் பதி, சா்க்காா் போரத்தி, சா்க்காா்பதி, கல்கொத்திப்பதி, சீங்கப்பதி, வெள்ளப்பதி, ஒட்டப்பதி, கரடிமடை அன்பு இல்லம், தொண்டாமுத்தூா், ஆா்.எஸ்.புரம் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகள், மத்வராயபுரம், தொம்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் என 500 பேருக்குத் தொடா்ந்து ஒரு மாத காலமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கபசுர குடிநீா் பொடி, வள்ளலாா் ஐங்கூட்டு, சூரக்கசாயம் உள்ளிட்ட மருந்துகள் தேவைப்படும் மக்களுக்கு நேரிலும், அஞ்சலிலும் வழங்கப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கபசுரப் பொடி உள்ளிட்ட மருந்துகள் தேவைப்படுவோா் பேரூராதீனத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.