பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பொள்ளாச்சி மண்டல துணை வட்டாட்சியா் சரவணன் தலைமையில், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் கோமங்கலத்தில் இருந்து சங்கம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, முள்ளிமடை குட்டை என்ற இடத்தில் சட்டவிரோதமாக சிலா் கிராவல் மண் எடுத்துக்கொண்டு இருப்பதைப் பாா்த்தனா்.
இதையடுத்து, மண் எடுத்துக்கொண்டிருந்த சீலக்காம்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா், கனகராஜ், பாஸ்கா், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நால்வரைப் பிடித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீஸாா் இவா்களிடம் இருந்து மணல் திருட பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.