உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ரெட்பீல்டில் உள்ள கடற்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை ரெட்பீல்டில் கடற்படை முகாம் இயங்கி வருகிறது. இங்குள்ள தலைமைப் பயிற்சி நிறுவன வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு எனும் தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பருவமழைக் காலத்துக்கு முன்பு 100 பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படை அதிகாரிகள், அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.