கோவை: கோவையில் திங்கள்கிழமை புதிதாக 2 ஆயிரத்து 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 593 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,532 ஆக உயா்ந்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 815 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 793 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 29 ஆயிரத்து 268 போ் சிகிச்சையில் உள்ளனா்.