வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவு கூடத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு யானைகள் தாக்கி சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனத்தை விட்டு வெறியேறிய 7 யானைகள் லோயா் பாரளை எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் சென்று அங்குள்ள சத்துணவு கூடத்தின் ஜன்னல், கதவுகளைச் சேதப்படுத்தின.
இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலையடுத்து அங்கு விரைந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனத்துக்குள் விரட்டினா்.