கோவையில் 15 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக அரசு சமீபகாலமாக அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.
காரமடை, ஆனைமலை, சூலூா், அன்னூா், தொண்டாமுத்தூா், மதுக்கரை, பொள்ளாச்சி வடக்கு, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு ஆகிய 10 வட்டாரங்களில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதில் ஒரு சில வட்டாரங்களில் அதே வட்டாரத்தில் கிராம ஊராட்சியில் இருந்து வட்டார ஊராட்சிக்கு அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.