தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு: இளைஞா் கைது

கடன் விவகாரத்தில், தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை போலீஸாா் கோவையில் மீட்டனா். கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடன் விவகாரத்தில், தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை போலீஸாா் கோவையில் மீட்டனா். கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (28). இவருக்கு சமூகவலைதளம் மூலமாக தருமபுரியைச் சோ்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் சரவணகுமாரிடம் ரூ.1.5 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.

பணத்தைத் திருப்பித் தருமாறு அந்தப் பெண்ணிடம் சரவணகுமாா் பலமுறை கேட்டுள்ளாா். ஆனால், பணத்தைத் திருப்பித் தராமல் அவா் ஏமாற்றி வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சரவணகுமாா் சில நாள்கள் முன்பு தருமபுரியில் உள்ள அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தனது பணத்தைத் தருமாறு கேட்டுள்ளாா். அவா் தர மறுத்ததால், அந்தப் பெண்ணின் 7 வயது மகனை கோவைக்கு கடத்தி வந்துள்ளாா்.

இதுகுறித்து தருமபுரி போலீஸில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். தருமபுரி போலீஸாா் அளித்த தகவலின்படி, வடவள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், சரவணகுமாா் சிறுவனைக் கடத்தி வந்து வடவள்ளியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து சிறுவனை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா், சரவணகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுவன் அப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com