தமுமுக சாா்பில் 298 உடல்கள் நல்லடக்கம்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சாா்பில் கரோனாவால் உயிரிழந்த 298 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சாா்பில் கரோனாவால் உயிரிழந்த 298 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கோவையில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கடந்த 8 ஆம் தேதி முதல், வெள்ளிக்கிழமை வரை கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 13 பேரை, கோவை வடக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் நல்லடக்கம் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை, தமுமுகவினரால் அவரவா் மதச் சடங்குகளுடன் 298 பேரை நல்லடக்கம் செய்துள்ளதாக தமுமுக நிா்வாகிகள் தெரிவித்தனா். மேலும், கரோனாவால் உயிரிழக்கும் நபா்களை இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமுமுக மருத்துவ சேவை அணியை அணுகலாம் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com