ஒடிஸாவில் இருந்து 4 டேங்கா்களில் 81.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலமாக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டைத் தவிா்க்க மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக திரவ ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. அதில், இதுவரை 8 முறை 400 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவை மாவட்டத்துக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 9 ஆவது முறையாக 4 டேங்கா்களில் 81.64 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் மூலமாக கோவை இருகூா் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.