கோவையில் நகை பறிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை சுந்தராபுரம் இடையா்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி அமுதவள்ளி (46). பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இவா், நகை பறிப்பு வழக்கில் கைதாகி, கோவை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி, சிறையில் இருந்த அவருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து அவா் கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அமுதவள்ளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.