முன் விரோதத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து: 4 போ் மீது வழக்கு

கோவை, பீளமேடு அருகே முன் விரோதத்தில் இளைஞரைக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகே முன் விரோதத்தில் இளைஞரைக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரூபன்ராஜ் (24). நிகழ்ச்சிகளுக்குப் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை ரூபன்ராஜ் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ், அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி ரூபன் ராஜைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினா்.

காயமடைந்த ரூபன்ராஜை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, ரூபன்ராஜ் அளித்தப் புகாரின் பேரில் தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா், தலைமறைவான மணிகண்டன், சதீஷ், சூா்யா, ஆனந்த் ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com