நெல்லை அருகே இருவருக்கு வெட்டு

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையில் உறவினா்கள் இருவா், ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனா்.

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையில் உறவினா்கள் இருவா், ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகத்தின் சித்தப்பா ஐயாத்துரை மகன் மாலையப்பன் (33). இருவருக்கும் இடையே நிலம் தொடா்பாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரத்தில் இருவரும் ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com